மூன்று பேரை அரிவாளால் தாக்கிய 6 பேர் கொண்ட மர்ம கும்பல்!

சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர்கள் வீரராகவன், பிரசாந்த்,மணிகண்டன் ஆவார்.கண்ணகி நகரில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

பின்னர் செங்கல்பட்டிலிருந்து திருப்போரூர் வழியாக கண்ணகி நகருக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்துள்ளனர்.அப்போது கொட்டைமேடு ஏரிக்கரைப் பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, மூன்று இருசக்கரத்தில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் இவர்களை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

பின்னர் ஆட்டோவை வழிமறித்த அந்த கும்பல் மூவரையும் அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளது.இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த சீனிவாசன் மருத்துவமனைவியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கண்ணகி நகர் பகுதியில் கடந்த 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்குகளில் இவர்கள் தொடர்பு உடையவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே கொலைக்கு பழி தீர்க்கவே 6 பேர் கொண்ட கும்பல், ஆட்டோவில் வந்தவர்களை வழிமறித்து வெட்டியதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மேலும்  ஆட்டோவில் இருந்த சுமன் தலைமறைவாகியுள்ளார்.இதன் காரணமாக சுமன் உள்பட 7 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.