என் தலைவன் இருக்கான் பாத்துப்பான்.! புகழ்ந்த சிஎஸ்கே CEO.!

என் தலைவன் இருக்கான் பாத்துப்பான்.! புகழ்ந்த சிஎஸ்கே CEO.!

ஐ.பி.எல் 13-வது சீசன் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருப்பதால் அந்த தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் 8 அணிகளில் 73 வீரர்களுக்கான காலியிடங்ககளுக்கு 332 வீரர்கள் போட்டியிட்டனர். இதில் 29 வெளிநாட்டு வீரர்கள் தவிர, உள்நாட்டு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டது. இந்த ஏலத்தில் 186 இந்திய வீரர்கள், 146 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் ஏலத்தில் சிஎஸ்கே நிறுவனம் பங்குபெற்று முதல் வீரரான சாம் கரண் என்ற இங்கிலாந்து ஆல்ரவுண்டரை ரூ.5.50 கோடிக்கு எடுத்தது. பின்னர் இரண்டாவது வீரரான பியூஸ் சாவலாவை ரூ.6.75 மிக பெரிய விலைக்கு வாங்கியது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் மூன்றாவது வீரரான ஜோஷ் ஹேசில்வுட் ரூ.2 கோடிக்கு எடுத்து ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றது. மேலும் நான்காவது வீரரான சாய் கிஷோர் ரூ.20 லட்சதுக்கு இளம் வீரரை தேர்வு செய்தது. பின்னர் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பியூஸ் சாவலாவை தேர்வு கேள்விக்குறியானது. ரசிகர்களிடையே ஏன் இவளவு பணம் குடுத்து வாங்கணும், ஏற்கனவே 5 ஸ்பின் பௌலர்ஸ் இருகாங்க என சரமாரியாக கேள்வி எழுந்தது.

பின்னர் தேர்வு முடிந்த பிறகு சிஎஸ்கே சார்பாக அங்கு சென்ற RJ ஒருவர் சிஎஸ்கே-யின் CEO விஸ்வநாதனிடம் ஏன் அவ்வளவு பணம் கொடுத்து பியூஸ் சாவலாவை எடுத்துருக்கீங்க என கேள்வி ஒன்று கேட்டார், அதற்கு அவர் என் தலைவன் இருக்காரு பத்துப்பாரு யாரை எப்படி எங்கே பயன்படுத்தனும் என்று அவருக்கு தெரியும். மேலும் எங்களுக்கு தேவைப்பட்ட வீரரை நாங்கள் எடுத்துவிட்டோம் என மகிழ்ச்சியோடு கூறியிருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube