நான் நடித்த காட்சி ஒன்றை பார்த்த எனது அப்பா கட்டி பிடித்து அழுதார் : நடிகர் ஷாரா

நான் நடித்த காட்சி ஒன்றை பார்த்த எனது அப்பா கட்டி பிடித்து அழுதார் : நடிகர் ஷாரா

நான் நடித்த காட்சி ஒன்றை பார்த்து அப்பா என்னை கட்டிப்பிடித்து அழுதது என்னை நெகிழ வைத்தது.

இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்பாம் ஓ மை கடவுளே திரைப்படம். இந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ஷாரா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், ‘ஊரில் உள்ள அனைவரும் எனது தந்தையிடம் உங்கள் மகன் நன்றாக நடித்திருக்கிறார் என்று பாராட்டி பேசும் போது, எனது அப்பா அதையெல்லாம் காதில் வாங்காமல் போய்விடுவார். நான் முதன் முதலாக என்னது அம்மாவையும், அப்பாவையும் அழைத்துக் கொண்டு ஓ மை கடவுளே திரைப்படத்தை பார்ப்பதற்காக சென்றேன்.

அப்போது நான் நடித்த காட்சி ஒன்றை பார்த்து என்னை அப்பா கட்டிப்பிடித்து அழுதது என்னை நெகிழ வைத்தது. இத்தனை நாளாக என்னை மதிக்காத என் தந்தை இப்படி செய்தது என்னை மிகவும் நெகிழ வைத்தது.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube