ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகனின் தந்தை உயிரிழப்பு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகனின் தந்தை உயிரிழந்துள்ளனர்.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிறையில் உள்ள முருகனின் தந்தை
புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இலங்கையில் யாழ்பாணத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி முருகனின் தந்தை மரணமடைந்தார் .