உடுமலை சங்கர் கொலை வழக்கு ! விடுதலையான சின்னசாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு

உடுமலை சங்கர் கொலை வழக்கு ! விடுதலையான சின்னசாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு

உடுமலை சங்கர் கொலை வழக்கில் விடுதலையான சின்னசாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு வேறு சமூகத்தை சேர்ந்த சங்கரும், கௌசல்யாவும் திருமணம் செய்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, கடந்த 2016 -ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில், சங்கா் உயிாிழந்தாா். சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கௌசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் திருப்பூர் நீதிமன்றம் வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், கவுசல்யா தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.இந்நிலையில் உடுமலை சங்கர் கொலை வழக்கில் விடுதலையான சின்னசாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார்.

Join our channel google news Youtube