இறந்துவிட்டதாக கூறிய இளம்பெண் இறுதி சடங்கில் உயிருடன் இருந்ததால் உறவினர்கள் ஷாக்-அரேங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

  • உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையால் சான்றளிக்கப்பட்ட ஒரு இளம் பெண் இறுதி சடங்கின் போது உடலில் உயிர் இருப்பதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனையில் அனுமதித்த அதிர்ச்சி.
  •  இச்சம்வமானது பாகிஸ்தானில் உள்ள காராச்சியில் நடைபெற்றுள்ளது.இதனால்   அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

இந்த அதிர்ச்சி சம்பவம் ஆனது பாகிஸ்தான் நாட்டில் அரேங்கேறி உள்ளது.இறந்துவிட்டதாக கூறப்பட்டவர் ரஷீதா என்கின்ற இளம்பெண் இவர் உடல்நலக் கோளாறு காரணமாக பாகிஸ்தான் உள்ள கராச்சி அப்பாசி சாகித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமால் உடல்நலக்குறைவு காரணமாக அவர் இறந்துவிட்டதாக அம்மருத்துவமனையின் மருத்துவர்கள் அறிவித்தனர். மேலும் ரஷீதாவின் இறப்பை உறுதி செய்கின்ற வகையில் மருத்துவமனையின் சார்பில் ஒரு இறப்புச் சான்றிதழும் ரஷீதாவின் உறவினர்களிடம் வழங்கப்பட்டது.இந்நிலையில் இறுதி சடங்கிற்கான வேலைகளில் ஈடுப்பட்ட உறவினர்கள் அவர்களின் வழக்கப்படி குளிக்க வைக்கும் நிகழ்வின் போது அவருடைய மூட்டுகளில் அசைவு இருப்பதை அவருடைய மருமகள் கண்டறிந்து அதிர்ச்சி ஆகினர் நிலையை உணர்ந்து சற்றும் தாமதிக்காத அவர்  ரஷீதா முன்னால் அனுமதிக்கப்பட்ட அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.தற்போது அவர் அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இறுதி சடங்கிற்கு வந்தவர்கள் அனைவரும் இந்த நிகழ்வை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதனால் அங்கு சற்று பதற்றம் கலந்த பரபரப்பு ஏற்பட்டது.மேலும் ஒரு உடலில் உயிர் இருக்கிறதா.?அல்லது இல்லையா என்று ஆராயத்தவறிய மருத்துவமனையை பொதுமக்கள் கண்டித்தும் வருகின்றனர்.

author avatar
kavitha