காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறி முரளி விஜய்..!

சையது முஷ்டாக் அலி  20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் மொத்தமாக 37 அணிகள் கலந்து கொண்டு உள்ளனர். இந்த  37 அணிகளும் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் தமிழக அணி “பி” பிரிவில் இடம்பெற்று உள்ளது. தினேஷ் கார்த்தி தலைமையில் தமிழக அணி விளையாடி வருகிறது. தமிழக அணி இதுவரை 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று  “பி” பிரிவு  புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
நாளை தமிழக அணி ,கர்நாடக அணியுடன் சூரத்தில் உள்ள லாலபாய் மைதானத்தில் மோத உள்ளனர். இந்நிலையில் தமிழக அணியின் தொடக்கக் வீரர் முரளி விஜய்க்கு கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக எம் . சித்தார்த் களமிறங்குவர் என கூறப்படுகிறது.

author avatar
murugan