மகளுடன் தகாத உறவு! தட்டிக்கேட்ட தாய்! கண்டுகொள்ளாத இளைஞர் பிணமாக மீட்பு!

  • 18 வயது வயது பெண்ணுடன் தகாத உறவு வைத்துள்ளார் பாபு என்ற திருமணமான ஆண்.
  • இதனை தவறு என பலமுறை அப்பெண்ணின் தாயார் பாபுவிடம் கூறியுள்ளாராம்.

மும்பை மாநகரம் , முல்லூண்டு பகுதியில் வசித்து வந்த பாபு என்கிற திருமணமான நபர், அப்பகுதியில் உள்ள 18 வயது இளம் பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்துள்ளார். இதனை அறிந்த அப்பெண்ணின் தாயார், பாபுவை கண்டித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி பாபு வீட்டில் இருந்து புறப்பட்டு பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து பாபுவின் குடும்பத்தார் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பெயரில் போலீசார் பாபுவை தேடினர்.

இந்நிலையில் பாபுவின் உடல் தானே பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. உடலை பாபுவின் மனைவி அடையாளம் காட்டிவிட்டார்.

பின்னர் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசாருக்கு பல தகவல்கள் கிடைத்தது. அதாவது, பாபு தொடர்பு வைத்திருந்த அப்பெண்ணின் தாயார், 4 பேருடன் சேர்ந்து, பாபுவை ஆட்டோவில் கடத்தி கொலை செய்தது அம்பலமானது. இதனை தொடர்ந்து 18வயது இளம்பெண்ணின் தயார் கீதாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர். மேலும் கொலையில் சம்பந்தப்பட்ட  4 பேரை தேடி வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.