சொந்த மண்ணில் தோல்வியை தழுவியது சென்னை அணி !இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை அணி

இன்றைய போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

இன்று முதல் தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் -மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது.

இந்த போட்டியானது, சென்னையில் உள்ள சேப்பாக்கம்  மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன்  தோனி பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 131 ரன்கள்  எடுத்தது.

இதன் பின் 132 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.மும்பை அணிக்கு ஆரம்ப முதலே அதிர்ச்சியாக அமைந்தது.ரோகித் 4,டிகாக் 8 ரன்களில் வெளியேறினார்கள்.இதன் பின் வந்த சூர்யகுமார் சிறப்பாக விளையாடினார்.

இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் அடித்தது.இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக சூர்யா குமார் 71 *ரன்கள் அடித்தார்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் தாகீர் 2  விக்கெட் வீழ்த்தினார்.

தோல்வியின் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் வெள்ளிக்கிழமை விளையாடுகிறது. வெற்றி மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

 

Leave a Comment