நிழல் உலக தாதா தாவூத் பாகிஸ்தானில் பல அடுக்கு பாதுகாப்பில் சொகுசு வாழ்க்கை..பாகிஸ்தானின் ரீல் அந்துவிட்டது.. அம்பலமானது உண்மை..

  • மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளியும், சர்வதேச பயங்கரவாதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ள நிழல் உலக தாதா  தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில்   சொகுசு வாழ்க்கையை  அனுபவித்து வருவதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.
  • அவருடைய சொகுசு வாழக்கை தொடர்பான புதிய  செய்தி மீண்டும் இந்த தகவலை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியாக இருந்த சோட்டா ராஜனின் திருட்டு கும்பலில் இருந்தவன் பெயர், இஜாஸ் லக்டாவாலா. இவன்  டில்லி, மும்பை போன்ற நகரங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி , பணம் பறித்தல் போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான்.  இவன் மீது 40 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. அண்மையில் மும்பை குற்றவியல் காவல் துறையினர்  லக்டாவாலாவை பாட்னாவில் வைத்து கைது செய்தனர்.

Image result for தாவூத் இப்ராஹிம்

பின் இஜாஸிடம் காவல்துறையினர்  நடத்திய தீவிர விசாரணையில்,நிழல் உலக தாதா  தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானின் கராச்சியில் தங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் போது, தாவூத் தங்கி இருக்கும் முகவரிகளை வெளியிட்டுள்ள இஜாஸ் லக்டாவாலா, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு, தாவூத் இப்ராஹிமுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளித்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்த உறுதிபடுத்தப்பட்டுள்ள தகவலால் பாகிஸ்தானின் பொய்யான மறுப்பு  தற்போது அம்பலமாகியுள்ளது.

author avatar
Kaliraj