Breaking : பாலிடெக்னிக் மாணவர் சுட்டு கொலை! சரணடைந்த இளைஞர் விஜய்!

Breaking : பாலிடெக்னிக் மாணவர் சுட்டு கொலை! சரணடைந்த இளைஞர் விஜய்!

நேற்று சென்னையை அடுத்த வேங்கடமங்கலத்தில் உள்ள தனது நண்பரான விஐய் வீட்டிற்கு சென்றுள்ளார். சென்னையை சேர்ந்த பாலிடெக்னிக் மானவர் முகேஷ். அங்கு முகேஷ் துப்பாக்கியால் சுடப்பட்டார். அதில் அவர் உடலில் குண்டு பாய்ந்தது.
பின்னர் அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு முகேஷை மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர். முதலில் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ரஜீவகாந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கி சூட்டில் முகேஷின் நண்பர் விஜய் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். விஜயை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் சென்னை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் போலிஸாரால்  தேடப்பட்டு வந்த விஜய் சரணடைந்துள்ளார். இவரிடம் போலீசார் எதற்காக துப்பாக்கி சூடு நடந்தது, துப்பாக்கி எங்கிருந்து வாங்கப்பட்டது என்று விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube