மளிகை பொருட்கள் வாங்கச்சென்ற மகன் புதுமனைவியுடன் வந்ததால் தாய் அதிர்ச்சி.!

மளிகை பொருட்கள் வாங்கச்சென்ற மகன் புதுமனைவியுடன் வந்ததால் தாய் அதிர்ச்சி.!

உத்தரபிரதேசத்தில் தாய்  மளிகைப்பொருட்களை வாங்கி வரும்படி மகனை கடைக்கு  அனுப்பி உள்ளார். பின்னர் மகன் புதுமனைவியுடன் வந்ததால் தாய் அதிர்ச்சியடைந்தார்.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் ஹூடு . இவர், சுவேதா என்ற பெண்ணை 2 மாதத்திற்கு முன் யாருக்கும் தெரியாமல் கோவிலில் திருமணம் செய்துகொண்டார். ஆனால், கொரோனா காரணமாக திருமணத்திற்கான சான்றிதழை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால்  சுவேதாவை டெல்லியில் ஒரு வீட்டை வாடகை வீட்டில் தங்க வைத்தார்.

இந்நிலையில், சுவேதா தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் திடீரென அவரை வீட்டை காலி செய்யும்படி வற்புறுத்தி உள்ளார்.இது குறித்து தனது கணவரிடம் சுவேதா கூறினார். இதைத்தொடர்ந்து, காசியாபாத்தில் வீட்டில் இருந்த ஹூடுவை நேற்று அவரது தாய் மளிகைப்பொருட்களை வாங்கி வரும்படி கடைக்கு அனுப்பி உள்ளார்.

இந்த, சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ஹூடு சுவேதாவை  காசியாபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.  தனக்கு தெரியாமல் மகன் திருமணம் செய்துகொண்டதால் தனது மகனையும், சுவேதாவையும் வீட்டிற்குள் அனுமதிக்க முடியாது என கூறி ஹூடு தாய் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார், இருவரையும் அனுமதிக்கும்படி ஹூடு தாயிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர் முடியாது என கூறியதால் தற்காலிகமாக இருவரும் டெல்லியில் உள்ள வாடகை வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தி போலீசார்  பிரச்சினையை தீர்த்து வைத்தனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube