குழந்தை பிறந்து இரண்டே வாரத்தில் உயிரிழந்த தாய்! காரணம் என்ன?

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரை சேர்ந்தவர் கார்த்திக். நிறைமாத கர்ப்பிணியான இவரது மனைவி தீபாவுக்கு கடந்த 18-ம் தேதி உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது அவருக்கு இரண்டாவது குழந்தை.
இந்நிலையில், தீபா தொட்டப்பநாயக்கனூரை சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அறுவை சிகிச்சை செய்த தையலை பிரித்துள்ளார். பிரித்த பின் வீடு திரும்பிய தீபாவுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இவருக்கு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு தீபா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குழந்தை பிறந்து இரண்டே வாரத்தில் தாய் இறந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், தீபாவின் மரணம் இயற்கையான மரணமா? அல்லது தவறான சிகிச்சையால் ஏற்பட்ட மரணமா? என போலீசார் விசாரித்து வருகினறனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.