ஒத்திவைக்கும் எண்ணம் இல்லை.! மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும் -ஓம் பிர்லா.!

சபாநாயகர் ஓம்பிர்லா  நாடாளுமன்ற கூட்டத்தொடர் திட்டமிட்டப்படி நடைபெறும் என தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா வைரசால் நேற்று வரை 62939 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19358 ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து குணமடைந்தோர்  எண்ணிக்கை 2109 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவை  தடுக்க விதமாக மே 17ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூன் மாத மத்தியில் அல்லது ஜூலை முதலில் நடைபெறும். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இந்த கூட்டத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா..? அல்லது ஒத்திவைக்கப்படுமா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 இந்நிலையில், சபாநாயகர் ஓம்பிர்லா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் திட்டமிட்டப்படி நடைபெறும். இப்போதைக்கு ஒத்திவைக்கும் எண்ணம் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக முடிவு அப்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk