நாடு முழுவதும் ரூ.2632.73 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்-தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் மட்டும் ரூ..514.57  கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் மற்றும்  இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் ஆணையம் அதன் பணிகளை முழு வீச்சில் செய்து வருகின்றது.குறிப்பாக பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை  பறிமுதல் செய்து வருகின்றது.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் நாடு முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்டதாக இதுவரை ரூ. ரூ.2632.73 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் மட்டும் ரூ.514.57 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

Leave a Comment