தேசத்தை பா.ஜ.க உச்சத்திற்கு எடுத்து செல்லும்: பிரதமர் மோடி

2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்த, உழைத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. தேசிய செயற்குழுவின் 2வது நாள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தேசத்தை பா.ஜ.க உச்சத்திற்கு எடுத்து செல்லும் என்றும் மக்களின் நம்பிக்கையை மத்திய அரசு பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இட ஒதுக்கீடு முறை இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாகவும் இட ஒதுக்கீடு மசோதாவின் நோக்கம் குறித்து தொண்டர்கள் விளக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். நீதித்துறை நடவடிக்கைகளில் காங்கிரஸ் இடையூறு செய்வதாகவும் கூறிய அவர், ராமர்கோயில் விவகாரத்தில் காங்கிரசால் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment