மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க மாட்டேன் -மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

நடத்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெருமைப்பாண்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழா நாளை நடைபெறுகிறது. .

இந்த விழாவில் பங்கேற்ற பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள்,வெளிநாட்டு அதிபர்கள் உட்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் மம்தா பங்கேற்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது.ஆனால் தற்போது நாளை பிரதமராக மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில் மம்தா பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி  கூறுகையில்,  மோடி பதவியேற்பு விழாவை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதாக தெரிகிறது என்று  மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி  தெரிவித்துள்ளார்.

Leave a Comment