சென்னை வந்திறங்கியுள்ளேன்-தமிழில் பிரதமர் மோடி ட்வீட்

சென்னை வந்திறங்கியுள்ளேன் என்று தமிழில் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று  சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.இதனால் பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்தடைந்தார்.


இது குறித்து தமிழில் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.அவரது பதிவில், சென்னை வந்திறங்கியுள்ளேன். கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும் என்று பதிவிட்டுள்ளார்.