மீண்டும் பிரதமராகும் மோடி…இந்தியளவில் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் உறுதி…!!

மக்களவை தேர்தல்  இன்னும் சில மாதங்களில் .இந்தியாவின் அடுத்த  பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் யார் என்று  இண்டியா டிவி மற்றும் சி.என்.எக்ஸ். நிறுவனம் சேர்ந்து  நாடு தழுவிய கருத்துக் கணிப்பை நடத்தியது.அதில் மீண்டும் மோடி பிரதமர்க வர வேண்டுமென்று 41 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர்.அதே போல இந்தியாவின் பிரதமராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வர வேண்டுமென்று  23 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதே போல , பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு 7 %  பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமாருக்கு 5 % , மம்தா பானர்ஜிக்கு 3 % ஆதரவு அளித்துள்ளனர்.அதே போல மோடி ஆட்சி காலத்தில் நாட்டிற்கு நன்மை விளைந்ததா என்ற கேள்விக்கு 46 % ஆதரவாகவும் , 34 % எதிராகவும் வாக்களித்துள்ளனர்.இதனால் மீண்டும் மோடி பிரதமராவர் என்று பாஜவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment