” மோடி ஒரு உளவாளி ” ராகுல் ஆதாரத்துடன் குற்றசாட்டு…!!

சி.ஏ.ஜி என்றழைக்கப்படும் மத்திய தணிக்கை துறை ஆடிட்டர் குழு ரபேல் போர் விமானங்கள் தொடர்பான தனது அவர் தனது அறிக்கையை இன்று தாக்கல் செய்ய உள்ளது.சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் ரபேல் பேரத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

மேலும் போர் விமானங்கள் வாங்கப்பட்டவிவரங்களை வெளிப்படையாக தெரிவிக்கவும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியது.இந்நிலையில் இன்று சிஏஜி தனது அறிக்கை தாக்கல் செய்கின்றது. அறிக்கையை தாக்கல் செய்ததும் ,  குடியரசுத் தலைவருக்கும் நிதி அமைச்சகத்துக்கு அனுப்பப்படும்.

இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி இணைய மின்னசலை வைத்து மீண்டும் குற்றம் சாட்டினார்.அப்போது , பிரதமர் மோடி இடைத்தரகர் போல செயல்படுகின்றார். பாதுகாப்பு அமைச்சக நடவடிக்கைகளை பிரதமர் அலுவலகம் உளவு பார்த்துள்ளது. அணில் அம்பானிக்கு சாதகமாக செயற்படுகின்றார். மேலும்  ரபேல் விவகாரத்தில் பிரதமர்  உளவாளியாக செயல்பட்டுள்ளார் என்று கடுமையாக சாடினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment