பீகாரில் மோடி பிரச்சாரம்..விறுவிறுப்பாக நடைபெறும் ஏற்பாடுகள்..!

பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நேற்று பா.ஜ.க தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

அதில், பா.ஜ.க வெற்றி பெற்றால் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். 2022-ம் ஆண்டுக்குள் 30 லட்சம் மக்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும் என கூறப்பட்டது.

இந்நிலையில், பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று சசாரம், கயா மற்றும் பாகல்பூரில் பிரசாரத்தைத் தொடங்கவுள்ளார். சசாரத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ள நிலையில் பியாடா மைதானத்தில் விறுவிறுப்பாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

author avatar
murugan