அடுத்த 48 மணி நேரத்தில்… தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.!

அடுத்த 48 மணி நேரத்தில்… தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.!

அடுத்த 48மணி நேரத்தில் கடலோரோ மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்.

அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கும், திண்டுக்கல், நீலகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், தேனி, கிருஷ்ணகிரி, போன்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையயம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் உட்பட்ட பகுதியில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube