காதலனால் கொலை செய்யப்பட்ட மாடல்!!

காதலனால் கொலை செய்யப்பட்ட மாடல்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரை சேர்ந்த அஷ்ராஃப் ஷெக். இவர் 19 வயதான ஒரு மாடல் அழகியை காதலித்து வந்தனர். அந்தப்பெண் மாடல் என்பதால், பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தாள். இந்நிலையில் காதலனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இவர்கள் இருவரும் கடந்த 12ஆம் தேதி காரில் நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தனர். அப்பொழுது அஷ்ராஃப் தனது காதலீயின் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை சாலையோரம் விசினார்.

அப்பொழுது அங்கு இருந்தவர்கள் உடலை பார்த்து, காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்க்கு விரைந்த காவல் துறை அதிகாரிகள், அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

அதன்பின், அந்த பெண்ணின் காதலனை கைது செய்து விசாரித்தபொது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Join our channel google news Youtube