பூட்டியிருந்த பள்ளியை திறந்து மாணவர்களுக்கு ஆங்கில பாடம் நடத்திய எம்.எல்.ஏ.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் பூட்டியிருந்த பள்ளியை திறந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர் செல்வம் மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.

ஆசிரியர்கள் போராட்டத்தால், ஜவ்வாதுமலை ஒன்றிய மலையடிவாரத்தில் உள்ள அரசு பள்ளி, பூட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதனையறிந்த கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வம், தற்காலிக ஆசிரியர்களுடன் அங்கு சென்று பள்ளியை திறந்தார். பின்னர் மாணவர்களுக்கு அவரே ஆங்கில பாடம் நடத்தினார்.

தற்காலிக ஆசிரியர்கள் மூலம் பள்ளி தொடர்ந்து இயங்கும் என்றும் பள்ளிக்கு சரியாக வர வேண்டும் என்றும் மாணவர்களுக்கு எம்.எல்.ஏ பன்னீர் செல்வம் அறிவுரை வழங்கினார். இது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment