நாளை திமுகவினருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.!

நாளை திமுகவினருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.!

நாளை காலை 10 மணிக்கு திமுகவினருடன் காணொலி காட்சி மூலமாக மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.

நாளை காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலர்கள் கூட்டம்  காணொலி காட்சி மூலமாக நடைபெற உள்ளது.இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் மீது பொய்வழக்கு போடுவது குறித்தும், காவல்துறை கைது குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளனர்.

பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் குமார் என்பவர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், ஆர்.எஸ்.பாரதியை இன்று காலையில்  2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்திய போது ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube