சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்தது அவமானம்-மு.க.ஸ்டாலின்

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஐஎன்எக்ஸ் முறைகேட்டு வழக்கில் விசாரணை நடத்த முயற்சி செய்து வரும் நிலையில் காங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.இதன் பின்னர் அவர் தனது வீட்டிற்கு வந்தார்.இதையறிந்த சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு செல்ல முயன்றனர் .உள்ளே அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சிதம்பரத்தின் வீட்டின்  சுவர் ஏறி குதித்து  சிபிஐ அதிகாரிகள் இல்லத்திற்குள் சென்றனர்.பின் சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு சென்று ப.சிதம்பரத்தை கைது செய்தனர்.

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்தது கண்டிக்கத்தக்கது. ப.சிதம்பரம் கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார்.