நாளைய நல்லாட்சிக்கு முன்னோட்டம் உள்ளாட்சி- ஸ்டாலின்

  • நாளைய நல்லாட்சிக்கு முன்னோட்டம் உள்ளாட்சித் தேர்தல் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  • தேர்தல் பணியிலுள்ள மாவட்ட ஆட்சியர் தொடங்கி அனைத்து அதிகாரிகள் மீதும் நம்பிக்கை உள்ளது என்றும் பேச்சு

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் டிச.,27 மற்றும் டிச.,30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.இதற்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக மாவட்டந்தோறும் நடந்து ஒய்ந்து வருகின்றது.இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து மு.க ஸ்டாலின் நாளைய நல்லாட்சிக்கு முன்னோட்டம் உள்ளாட்சித் தேர்தல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக காத்திருக்கிறது.உள்ளாட்சி தேர்தல் களத்தில் தோழமை சக்திகளுடன் உறுதியாக துணை நின்று வென்று காட்டுவோம். தேர்தல் பணியிலுள்ள மாவட்ட ஆட்சியர் தொடங்கி அனைத்து அதிகாரிகள் மீதும் நம்பிக்கை உள்ளது அதிகாரிகள் பயமின்றி, பாரபட்சமின்றி தங்கள் ஜனநாயக பணியை நிறைவேற்றிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
kavitha