உண்மையாகவே டோக்கியோவில் இருந்துதான் நம்ம சிவா வந்துள்ளாராம்! வெளியான செம தகவல்!

நடிகர் சங்க தேர்தலில் ஒட்டு போடா வந்த பொழுது நடிகர் மிர்ச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ சொன்னா நம்ப மாட்டீங்க நான் டோக்கியோவில் இருந்து வரேன்’ என குறிப்பிட்டு இருந்தார். அதனை பலரும் கிண்டலாக கூறுகிறார் என நினைத்திருந்தோம்.

ஆனால் அவர் உண்மையாகவே டோக்கியோவில் படப்பிடிப்பில் தான் இருந்துள்ளார். அவர் நடிக்கும் புதிய படம் சுமோ என்ற மல்யுத்த விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படுகிறதாம் . இந்த பட ஷூட்டிங் முழுவதும் டோக்கியோவில் தான் படமாக்க படுகிறதாம்.

இந்த படாதிற்கு ‘சர்வம் தளமயம்’ பட இயக்குனரும் பிரபல ஒளிப்பதிவாளரும் ஆனா ராஜீவ் மேனன் தான் ஒளிப்பதிவு செய்கிறாராம். பிரியா ஆனந்த் ஹீரோயினாக நடித்து வருகிறாராம். இந்த படத்தின் முதல் கட்டம் முடிந்துள்ளதாம். படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.