அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான புகார் ! உயர்நீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான புகாரை டிசம்பர் 18-ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தது.அதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே டெண்டர்களை ஒதுக்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில் ,உள்ளாட்சித்துறை டெண்டர் தொடர்பான வழக்கில் பதிலளிக்க அமைச்சர் வேலுமணிக்கு இறுதி கெடு விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.நவம்பர் 1-ஆம்  தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேலுமணி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதனையடுத்து அமைச்சர் வேலுமணி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில் அரசியல் ஆதாயத்திற்காகவும்,உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.  இறுதியாக சென்னை உயர்நீதிமன்றம்,  வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை டிசம்பர் 18-ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவு பிறப்பித்தது.