மாணவர்கள் 3 மரக்கன்றுகளை வளர்த்தால் அதற்கு மதிப்பெண் வழங்குவது பற்றி பரீசிலனை-அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்கள் 3 மரக்கன்றுகளை வளர்த்தால் அதற்கு மதிப்பெண் வழங்குவது பற்றி பரீசிலனை செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை மீனம்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,   தமிழகத்தில் 131 இடங்களில் சாரணர் இயக்கம் செயல்பட இடங்களை ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்கப்படும். சாரணர் இயக்க மாணவர்களுக்கு சீருடைகள், ஷூக்கள் வழங்குவது குறித்து முதல்வரிடம் பேசப்படும்.

மாணவர்கள் 3 மரக்கன்றுகளை வளர்த்தால் அதற்கு மதிப்பெண் வழங்குவது பற்றி பரீசிலனை செய்யப்படும்.விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு திறன் பயிற்சி என்ற கல்வியை வழங்க அரசு திட்டமிட்டு வருகிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.