அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கட்சி பதவி பறிப்பு.! ஓபிஎஸ், ஈபிஎஸ் அதிரடி முடிவு.!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் விருதுநகர் மாவட்டம் அதிமுக கழக செயலாளர் மற்றும் பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் விருதுநகர் மாவட்டத்திற்கு புதிய செயலாளராக அல்லது பொறுப்பாளராக யாரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சையான பேச்சுக்களால் பல்வேறு விமர்சனங்கள் அவர் மீது எழுந்த நிலையில், தற்போது அதிமுக கழக செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்