பட்ஜெட்டுக்கு முன்பு அல்வா வழங்கிய நிதி அமைச்சர்..! அச்சடிக்கும் பணிகள் தொடக்கம்

பட்ஜெட்டுக்கு முன்பு அல்வா வழங்கிய நிதி அமைச்சர்..! அச்சடிக்கும் பணிகள் தொடக்கம்

  • 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்  பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
  • மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைவருக்கும் அல்வா வழங்கினார்.

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்ய உள்ளார்.இதற்கு இடையில் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5 %  குறையும் என்று மத்திய அரசு தெரிவித்தது. எனவே பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்டறிந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

2020-2021-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர்கள், நிதி ஆயோக் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் நிதின் கட்கரி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆனால் ஒவ்வொரு வருடமும் மத்திய அரசின் நிதி பட்ஜெட் தயாரிக்கும் செய்யும் முன்பு அல்வா கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது.இந்திய கலாச்சாரம் படி எந்த ஒரு நல்ல விஷயம் தொடங்கும் முன்பு இனிப்பு வழங்கப்படும்.எனவே  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதனால் இன்று பட்ஜெட் தயாரிப்பிற்கு முன் நடக்கும் அல்வா நிகழ்வு டெல்லியில் உள்ள நிதியமைச்சக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கலந்து கொண்டு அனைவருக்கும் அல்வா வழங்கினார்.அல்வா வழங்கிய நிலையில் பட்ஜெட் ஆவணங்கள்  அச்சடிப்புப்பணி இன்று தொடங்கியது.குறிப்பாக பட்ஜெட் ஆவணங்கள் அச்சடிப்பு பணிகளில் ஈடுபடும்  ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாள் வரை  அங்கேயே தங்கியிருக்க வேண்டும்.யாரும்  வீட்டிற்கு செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube