கச்சத்தீவை தாரை வார்த்த திமுக தான் முதுகெலும்பற்றவர்கள் ஜெயக்குமார் காட்டம்

நாடுளுமன்றத்தில் காஷ்மீர் யூனியன் பிரேதேசங்களாக பிரிக்கப்பட்டது குறித்து விவாதம் நடைபெற்றது .இதில் திமுக சார்பில் மக்களவை குழுத்தலைவர் டீ.ஆர்.பாலு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிக்கொண்டு இருந்தார்.அப்பொழுது அவர் பேச்சை குறுக்கிட்டு பேச அதிமுக எம்.பி.ரவீந்திரநாத் பேச முற்பட்டார் .ஆனால் டி.ஆர்.பாலு  அவர் இடக்கையை காட்டி கீழே அமருமாறும் முதுகெலும்பு உள்ளவர்க்கே இங்கு பேச அனுமதிக்கபட்டுள்ளது என்று கூறினார .`இதைக்கண்டு திமுக எம்.பி க்கள் மேசையை தட்டி சிரித்தனர் .

இதனிடையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன் வளத்தகுறை அமைச்சர் ஜெயக்குமார்  திமுக தன் முதுகெலும்பு இல்லாமல் இருக்கிறது என்று கூறினார்.

அப்பொழுது அவர் பேசும்பொழுது ஊருக்கு தான் உபதேசம் என்றும் ,இன்று தமிழ்நாடு மீனவர்கள் பல பிரச்னைக்கு ஆளாகின்றனர் .அகன்று கச்சதீவை முதுகெலும்பு இல்லாமல் தாரைவார்த்துவிட்டு இன்று எங்களை பார்த்து சொல்கிறார்கள் அவர்கள்  தான் முதுகெலும்பு அற்றவர்கள் என்று தெரிவித்தார் .

author avatar
Dinasuvadu desk