இன்று கடைபிடிக்கப்படுகிறது மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 31வது நினைவு தினம்…!!

மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 31வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
மக்கள் திலகம் எம்ஜிஆரின் 31வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு எம்ஜிஆரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளனர். அதிமுக தொண்டர்கள், கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment