6-வது முறையாக “பாலன் டி ஓர்” விருதை தட்டி சென்ற மெர்சி..!

பிரான்ஸில் பிரான்ஸ் ஃபுட்பால்  என்ற பத்திரிகை சார்பில் 1956-ம் ஆண்டு முதல் “பாலன் டி ஓர்” விருது கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த விருது பல்வேறு மக்களின் வாக்குகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது.

இந்த வருடம் “பாலன் டி ஓர்” விருதினை பார்சிலோனா நட்சத்திரம் மெர்ஸி பெற்றார்.இவர் கடந்த 2009-ம் ஆண்டு முதல் முறையாக இந்த விருதினைப் பெற்றார். அதன் பிறகு ஆண்டுதோறும் மெர்சி மற்றும் ரொனால்டோ இருவரும் மட்டுமே மாறி மாறி இந்த விருதினை பெற்று வந்தன.

Image

சென்ற ஆண்டு இந்த விருதை ரியல் மாட்ரிட்டின் வீரர் லூகா மோட்ரிக் தட்டிச் சென்றார். இந்நிலையில் நேற்று பாரிஸில்  நடந்த விருது வழங்கும் விழாவில் 3 வருடங்களுக்கு பிறகு ஆறாவது முறையாக மெர்சி “பாலன் டி ஓர்” கோப்பையை கைப்பற்றினார்.

இந்த விழாவில் ரொனால்டோ கலந்து கொள்ளவில்லை என்றாலும் மெர்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

author avatar
murugan