இன்று தொடங்குகிறது ஐபிஎல்…CSK vs MI வெற்றி யாருக்கு..?

 அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் 13 வது சீசன் ஐபிஎல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

13 வது சீசன் ஐபிஎல் தொடர் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இரவு 7. 30 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மூன்று முறை கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் நான்கு முறை கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியனஸ் அணியும்  மோதவுள்ளது. இந்நிலையில் இதற்கு அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்து உள்ளார்கள் என்று கூறலாம்.

இந்நிலையில் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார், அவரை தொடர்ந்து ரெய்னாவும் தனத்தை ஓய்வு அறிவித்தார், சர்வதேச போட்டிகளிலிருந்து, ஓய்வு மட்டும் அறிவிக்காமல், ஐபிஎல் போட்டியிலும் தனது சொந்த காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்தார், மேலும் இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னாவின் இடத்தில யார் யார் இறங்கப்போகிறார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வருடம் ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மிகவும் சிறப்பாக விளையாடுவார் என்று நினைத்து அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துள்ளார்கள். மேலும் நான்கு முறை கோப்பைகளை வென்று சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்லும் நோக்கத்துடன் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் மிகவும் முக்கிய பந்து வீச்சாளரான மலிங்கா இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் தனது சொந்த காரணங்களுக்காக விளையாடாமல் விலகியது மும்பை அணிக்கு மிகவும் ஒரு சருகலாக அமைந்துள்ளது.

மேலும் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஐபிஎல் போட்டியை காண அனைத்து ரசிகர்களும் மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளார்கள், மேலும் சென்னை அணி மற்றும் மும்பை அணி மோதும் முதல் போட்டியில் எந்த அணி வெற்றி பெரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.