பண்டிகை காலங்களில் படம் வெளியாவதில் அரசு தடை இல்லை – கடம்பூர் ராஜூ

பண்டிகை காலங்களில் படம் வெளியாவதில் அரசு தடை இல்லை – கடம்பூர் ராஜூ

பண்டிகை காலத்தில் படம் வெளியாவதில் அரசு தடை இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக திரைப்படத் துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி பல படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர். முன்னதாக, திரையரங்குகள் திறப்பது குறித்து பேசிய விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ,சூழலை பொறுத்து தான் திரையரங்குகள் திறக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது முன்னணி நடிகர்களின் படத்தை பண்டிகை காலங்களில் வெளியிடுவதில் அரசு எப்போதும் தடையாக இருக்காது என்றும், மக்கள் பாதிக்கப்படாத வகையில் திரையரங்குகளை திறக்க வேண்டும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube