சித்தப்பு பாத்து காலுல விழுறது மீரமிதுன்! அப்புறம் அவ்ளோதான்!

நடிகை மீரா மிதுன் பிரபலமான நடிகையும், மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் மற்றும் போதை ஏறி புத்தி மாறி போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
நடிகை மீரா மிதுன் பல சர்ச்சைகளில் ஈடுபட்டதால், இவர்மீது சில பிரபலங்கள் புகார் தெரிவித்திருந்தனர், இந்நிலையில், சில சர்ச்சைகளுக்கு மத்தியில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சரவணன் ஒரு கோவில் திருவிழா நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், மீரா மிதுன், ரித்விகா, சாண்டி மற்றும் தர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மீரா மிதுன், சரவணனின் காலில் விழுந்து ஆசீர் பெற்றுள்ளார். இதனை மீரா மிதுன் தனது இணைய பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.