வானில் பறந்த பாராசூட்! எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்ததில் இருவர் பலி!

வானில் பறந்த பாராசூட்டின் கயிறு எதிர்பாராதவிதமாக  அறுந்ததில் இருவர் பலி.

கிரீஸ் நாட்டில் உள்ள ரோட்டீஸ் தீவுக்கு, பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ஒரு குடும்பம் சுற்றுப்பயணம் வந்துள்ளது. இந்த குடும்பத்தார் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில், பாராஷூட் விளையாட்டு நடந்து கொண்டு இருந்துள்ளது. இதனையடுத்து, அந்த குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பாராசூட்டில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பாராஷூட்டின் கயிறு அறுந்த நிலையில் இருந்துள்ளது. அப்போது காற்று பலமாக வீச, மூவரையும் காற்று அங்கிருந்த பாறையில் வீசி அடித்துள்ளது. இந்த சம்பவத்தில்  இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஒரு சிறுவன் மட்டும் பலத்த காயங்களுடன் பாறையின் அருகே கிடந்துள்ளார். இதனையடுத்து, கடலோர காவல்படையினர் அந்த சிறுவனை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கிரீஸ் நாட்டில் இரண்டு அல்லது மூன்று பேர் ஒரே நேரத்தில், பாராஷூட்டில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி செயல்பட்டதால், காவலர்கள், விசைப்படகு ஒட்டிய நபர் மற்றும் வாட்டர்ஸ் போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் இருவரையும் வைத்து செய்து காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.