மேயர் மறைமுக தேர்தல் -உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை பிறப்பித்தது.மேலும் நகர்மன்ற, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கும் மறைமுக தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்தது.
இந்த நிலையில் இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.இதனை வழக்கறிஞர் நீலமேகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளை முறையிட்டுள்ளார்.அவர் முறையீடாக செய்த நிலையில் மனுவாக தாக்கல் செய்வதாக விசாரிப்பதாக அறிவித்தது  உயர்நீதிமன்ற மதுரை கிளை.அவர் இன்றைக்கும்  மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிக்க வாய்ப்பு உள்ளது.