நடிகர் சாந்தனுவிடம் மன்னிப்பு கேட்ட மாஸ்டர் பிரபலம்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகன் மற்றும் கௌரி கிஷான் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த 15-ம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய கௌரி கிஷான் சாந்தனுவை, வாய் தவறி சாந்தனு மாம் என்று கூறியுள்ளார். அடுத்த கணமே இவர் மன்னிப்பு கேட்டாலும், அரங்கில் கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரித்துள்ளனர். இதனையடுத்து, இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.