திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்த பார்த்தீபன் !

நடிகர் பார்த்தீபன் கோலிவுட் சினிமாவில் உள்ள மிக சிறந்த இயக்குநர் ,நடிகர் என பன்முக திறமை கொண்டவர்.இவர் கோலிவுட்  சினிமாவில் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
இந்நிலையில் நடிகர் பார்த்தீபன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ,தனது திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.அதில் அவர் பெற்றோர்கள் செய்து வைக்கும் திருமணத்தை விட காதல் திருமணம் மிகவும் எமோஷனல் மற்றும் செண்டிமெண்ட் நிறைந்தது.
மேலும் வாழ்க்கையில் சின்ன சின்ன மாறுபாடுகள் கண்டிப்பாக வரும். இதனால் பிரிவு கூட வரும் அது காதலில் இணைந்தது தான். வாழ்க்கை ஒரு  முறை தான். அது அந்த பெண்ணுடன் தான்.அவருக்கும் அப்படித்தான். இந்நிலையில் அனைத்தையும் சகித்து கொண்டு வாழ்வதை விட அவர் அவருக்கு பிடித்தமாதிரி பிரிந்து வாழ்வது சந்தோசம் தான்.இது கூட காதல் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.