சதம் விளாசிய ராகுல் -நியூசிலாந்து அணிக்கு 297 ரன்கள் இலக்கு

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்ற கடைசி மற்றும் 3வது ஒரு நாள் போட்டியானது  பேஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7  விக்கெட்டுகளை இழந்து 296 ரன்கள் அடித்துள்ளது.இந்திய அணியில் அதிகபட்சமாக ராகுல் 112 ரன்கள் , ஸ்ரேயாஸ்  62 ரன்கள் அடித்துள்ளனர்.இதன் பின்னர் 297 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன்  நியூசிலாந்து அணி களமிறங்கவுள்ளது.