கோவை அருகே வீட்டில் பதுங்கியிருந்த பெண் மாவோயிஸ்ட்.. சுற்றிவளைத்த போலீசார்..

கடந்த அக்டோபர் மாதம் கேரளா அட்டப்பாடி அருகே மஞ்சக்கண்டி வனத்தில் தண்டர்போல்டு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும் , போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
இந்த துப்பாக்கி சூட்டில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த கும்பலில் இருந்த பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீமதி தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில் மாவோயிஸ்ட் ஸ்ரீமதி நேற்று கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே மூலங்கொம்பு மலையில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில்விரைந்து சென்ற போலீசார் அவர் தங்கியிருந்த வீட்டை நேற்று அதிகாலை சுற்றி வளைத்து ஸ்ரீமதியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

author avatar
murugan