ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார் மன்மோகன் சிங்

ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார் மன்மோகன் சிங்

மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது.ஆனால் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது.தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி ராஜினாமா செய்துவிட்டதாக தெரிவித்து விட்டார்.இதன் பின்னர் பல மாநில தலைவர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள்.

இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார்.இதற்காக வருகின்ற 13-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யுவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Join our channel google news Youtube