மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் மன்மோகன் சிங்

இன்று எம்.பி.யாக பதவியேற்றார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ,முன்னாள் பிரதருமான மன்மோகன் சிங்.

ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ,முன்னாள் பிரதருமான மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டார்.இவர் கடந்த  முறை அசாம் மாநிலத்தில் இருந்து மன்மோகன் சிங் தேர்வான நிலையில், தற்போது அசாமில் போதுமான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் ராஜஸ்தானில் இருந்து போட்டியிட்டார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் பாஜக தரப்பில் யாரும் போட்டியிடவில்லை. இதற்காக ஆகஸ்ட் 13-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார் மன்மோகன் சிங்.இந்த நிலையில் ராஜஸ்தானில் இருந்து போட்டியின்றி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் மன்மோகன் சிங்.

இந்த நிலையில் இன்று ராஜஸ்தான் மாநிலங்களவைக்கு எம்.பி.யாக தேர்தெடுக்கப்பட்ட மன்மோகன் சிங் பதவியேற்றார்.