#Breaking : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் திடீர் அனுமதி.!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான மன்மோகன் சிங் ( 87 வயது ) நெஞ்சுவலி காரணமாக தற்போது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இவர் 1991 -96 காலகட்டத்தில் மத்திய நிதியமைச்சராகவும், 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில்  இரண்டு முறை பிரதமராக பதவிவகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.