பசியால் தவித்த திருநங்கைகளுக்கு உதவிய மஞ்சு வாரியர்!

பசியால் தவித்த திருநங்கைகளுக்கு உதவிய மஞ்சு வாரியர்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக, மத்திய மற்றும் மாநில அரசு கொரோனா தொற்று பரவுவதை தவிர்க்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள்  பலரும் வீட்டிலே முடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்குபவர், மஞ்சு வாரியர். இவர் தமிழில் தனுசுடன் “அசுரன்” படத்தில் நடித்தார். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மஞ்சு வாரியர் சினிமா தொழிலாளர்களுக்கு 5 லட்ச ரூபாய் நீதி வழங்கினார்.

இந்நிலையில், 50 திருநங்கைகள் வேலையின்றி பசியால் தவித்து வந்ததை அறிந்த இவர், அவர்கள் இருக்குமிடத்திற்க்கே சென்று 35,000 ரூபாய் நீதியுதவியாக வழங்கினார். 

Join our channel google news Youtube