கேரள டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்த அசுரன் நாயகி!

கேரள சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மஞ்சு வாரியார். இவர் தமிழில் அண்மையில் நடித்த அசுரன் திரைப்படம் அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இவர் ஏற்று நடித்த பச்சையம்மாள் கதாபாத்திரம் அதிக பாராட்டுகளை பெற்று வருகிறது.
இவர் கேரள டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், ‘ ஓடியன் பட இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் மற்றும் அவரது நண்பர் மாத்யூ சாமுவேல் இருவரும் தன் மீது, அதிகமான அவதூறுகளை பரப்புவதாகவும், அதனால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது.’ எனவும் புகார் அளித்துள்ளார்.
ஓடியன் திரைப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் கூறுகையில், ‘ நீங்கள் ( மஞ்சு வாரியார்) கொடுத்த புகாரை நான் பத்திரிக்கையின் வாயிலாக தெரிந்துகொண்டேன். உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன் என தெரியவில்லை. திலீப்பை விட்டு நீங்கள் பிரிந்து வந்தபோது உங்களை ஒரு விளம்பரப்படம், மற்றும் ஒரு திரைப்படம் என நடிக்க ஒப்பந்தம் செய்து 25 லட்சம் தொகை வாங்கி கொடுத்தேன். எனவும்,
மேலும், இந்த புகாரால், நான் மிரட்டல்களை, அவமானங்களையும் சந்தித்து வருகிறேன். இந்த புகாரை நான் சட்டப்படி எதிர்கொள்கிறேன் என சமூக வலைதளம் மூலம் தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.