மாஞ்சா நூலால் மீண்டும் விபரீதம்! சிறுவர்களிடம் போலீசார் விசாரணை!

சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன். இவர் மெடிக்கல் ரெப்பாக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை தொடர்பாக கன்னிகாபுரம் மைதானம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் அவரது கழுத்தின் ஓரத்தில் பட்டுள்ளது.
இதனை சுதாரித்துக் கொண்ட அவர், உடனடியாக வண்டியை நிறுத்தியுள்ளார். மாஞ்சா நூல் அவரது கழுத்தில் அர்த்தத்தில் லேசான வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இவர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இது தொடர்பாக புளியந்தோப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், மைதானத்தில் பட்டம் விட்ட இரண்டு சிறுவர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பதாக மாஞ்சா நூல் கழுத்தில் வெட்டியதால், 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.